போராட்டக்காரர்கள் மீது இராணுவர்த்தினரின் மிலேச்சதனமான தாக்குதல்! சஜித் கடும் கண்டனம்
கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீது இராணுவதினர் நடத்திய தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளதுடன், அதில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
A cowardly assault against PEACEFUL protestors, who agreed to vacate the sites today; A useless display of ego and brute force putting innocent lives at risk & endangers Sri Lanka’s international image, at a critical juncture. https://t.co/E6g9lEUgV1
— Sajith Premadasa (@sajithpremadasa) July 22, 2022
சஜித்தின் கண்டனம்
அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது.
இன்றைய தினம் அவர்கள் குறித்த இடத்திலிருந்து தங்கள் போராட்டத்தை மீளப்பெறத் தீர்மானித்திருந்த நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் மிலேச்சதனமான தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தை எதிர்கொண்டிருந்தது.
அத்துடன் மிக இக்கட்டான தருணமொன்றில் இலங்கையின் நற்பெயரை சர்வதேச ரீதியாக கெடுக்கும் வகையிலும் இந்தச் செயற்பாடு நடைபெற்றுள்ளது என்றும் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.