பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்!

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Kiruththikan Jul 11, 2022 07:17 AM GMT
Report

தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம்

அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. 

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம்கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக அரச தலைவர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என சபாநாயகர் கடந்த சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதி

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

கோட்டாபய ராஜபக்ச முன்னர் அறிவித்தபடி வரும் 13ம் திகதி பதவி விலகுவதாக இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், அரச தலைவர் பதவியை ஏற்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ரணிலின் கனவு 

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேறுமானால் இதுவரை காலமும் அரச தலைவர் பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும் என பரவலான கருத்துப் பரிமாற்றங்கள் இடம் பெற்றன.

எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், அரச தலைவர் பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் பரவலாக அரசியல் வட்டாரங்கள் இடையே எழுந்துள்ளது.

இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வேட்பாளராக டளஸ்

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

இந்தநிலையில் அவர் அரசத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டலஸ் அழகப்பெரும நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், நேற்று மாலை வரை, சஜித் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை என்பதும் ரணில் விக்ரமசிங்க பதவியில் தொடர்ந்தால், ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை அரச தலைவராக பதவியேற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அரச தலைவர் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 நாட்களுக்கு தற்காலிக அரச தலைவர்

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

விக்ரமசிங்கவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, ஆனால் அவர் பொருத்தமான வேட்பாளரை பரிந்துரைக்க நாடாளுமன்றின் உதவியை நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு தற்காலிக அரச தலைவராக புதன்கிழமை பதவியேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது நாடாளுமன்றம் புதிய அரச தலைவரை தெரிவு செய்யும் எனவும் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட எந்தவொரு வேட்பாளரும் அரச தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரதமர்

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச காணொளி மூலமாக அமைச்சரவை கூட்டத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்படுன்றது.

அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் எதுவும் அரச தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள், தங்கள் பொறுப்புக்களில் நீடிப்பார்கள் என்று தெரியவருகிறது.

முன்னதாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தம்மிக்க பெரேரா மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர்.

எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை ரணிலிடம்: பதவியேற்கும் தற்காலிக அரச தலைவர்! | Sri Lanka Political Crisis Gottabaya Ranil

ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026