இலங்கையில் சமாதானம் நிலவ இந்தியாவில் வரையப்பட்ட மணல் ஓவியம்(photo)
Sri Lankan protests
Sri Lankan Peoples
India
By Jaso
இலங்கையில் அரசுக்கெதிரான போராட்டங்கள் உச்சத்தை தொட்டுள்ளன. ஆளும் தரப்பின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் போராட்டகாரர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அவர்கள் இருக்கும் இடம் கூட இதுவரை தெரியாத நிலையே உள்ளது.
அமைதியான போராட்டம் வன்முறை களமாக மாறியதற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்வே பொறுப்பு என பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவர் இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தி மணலில் ஓவியம் ஒன்றை செதுக்கியுள்ளார்.
குறித்த மணல் ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த மணல் சிற்பதை சுதர்சன் பட்நாயக் இந்தியாவின் பூரி கடற்கரை பகுதியில் செதுக்கியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி