வலுக்கும் பொருளாதார சவால் - ரஷ்யாவிடம் சரணாகதியடைந்த கோட்டாபய!
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய கடனுதவி வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது கோட்டாபய ராஜபக்ச இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் . கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
தற்போதைய பொருளாதார சவாலை வெற்றி கொள்வதற்கு குறித்த கடனுதவி அவசியமாகவுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான தொலைபேசி மூல கலந்துரையாடல் மிகவும் சாதகமான முறையில் அமைந்திருந்ததாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
Aeroflot விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிய கோட்டாபய
அத்துடன், கடந்த காலங்களில் ரஷ்யா வழங்கிய உதவிகளுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே, Aeroflot விமான நிறுவனத்தின் இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்குமாறும் கோட்டாபய ராஜபக்ச புட்டினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இதன்போது இருதரப்பினரும் இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2/2
— Gotabaya Rajapaksa (@GotabayaR) July 6, 2022
Further, I humbly made A request to restart @Aeroflot_World operations in #lka. We unanimously agreed that strengthening bilateral relations in sectors such as tourism, trade & culture was paramount in reinforcing the friendship our two nations share.