இராஜதந்திரிகளின் கண்டன அறிக்கை - உலக நாடுகளை நோக்கி ரணில் தொடுத்த கேள்விக்கணை!
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான இராணுவ நடவடிக்கை குறித்து உலக நாடுகளின் இராஜதந்திரிகள் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்களின் கண்டனங்கள் தொடர்பில் ரணில் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உங்களது அரச அலுவலகத்தை போராட்டக்கார்கள் சட்டவிரோதமாக கைப்பற்ற அனுமதி வழங்குவீர்களா என இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறியும் ஆக்கிரமிப்பு
அதேவேளை நீதிமன்ற உத்தரவை தொடர்ந்தும் அவர்கள் அதிபர் மாளிகையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தனர் என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்னர் அதிகாரிகளை தொடர்புகொண்டு உரிய தகவல்களை பெறவேண்டும் எனவும் அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதுமட்டுமன்றி சமூக ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கைகளை வெளியிடுவது இலங்கையின் பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்க, உத்தியோக பூர்வமில்லாத வகையில் தனது கரிசனையை இராஜதந்திரிகளிடத்தில் முன்வைத்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
