திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்படும் நகர்வு - ரணிலின் ஆட்சிக்கு மிக விரைவில் முடிவு!
அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதாக பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ச இராணுவ ஆட்சிக்குழுவின் கதை மிக விரைவில் நிறைவு பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறைகளைப் பெரிதுபடுத்திக்கொள்ளுங்கள்
அதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சிறைகளை பெரிது படுத்திக் கொள்ளுமாறும், மேலும் துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வருமாறும் தான் கோரிக்கை விடுவதாகவும் வசந்த முதலிகே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.