சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்

Sonnalum Kuttram
By Vanan Sep 06, 2023 09:53 AM GMT
Report

இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான இலங்கை குறித்த சிறப்பு ஆவணம் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே திடுக்கிடும் சில விடயங்களை வெளிப்படுத்தியது.

இந்த ஆவணம் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிர்கள் உட்பட்ட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களால் நேரடியாக பார்வையிடப்பட்டிருந்தது.

அதேபோல, இன்று காலை முதல் தமிழர்களின் சமுக வலைத்தளங்களிலும் அது பகிரப்பட்டுவருகிறது.

அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் சஹ்ரானின் அமைப்பில் இருந்து குண்டுதாரிகளால் ஆறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தபட்டிருந்தன.

இதில் 269 பேர் கொல்லப்பட்டு ஏராளமானவர்கள் காயமடைந்த நிலையில், இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் சாட்சியங்களும் இருந்தன.

இந்த குரூரத்துக்குப் பின்னால் ராஜபக்ச அதிகாரமையத்தின் அதிகார ஆசைகள் சார்ந்த உண்மைகள் இருப்பதாகவும் இந்த ஆவணம் குற்றம் சாட்டியுள்ளது.

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

பிள்ளையான் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்: முன்னாள் சகா ஐபிசிக்கு அதிரடி தகவல்

இந்த ஆவணத்தின் முக்கால்வாசி பகுதி குண்டுவெடிப்புகள் நடைபெறுவதற்கு முன்னர் இருந்த நிலைமைகளை பேசுகிறது. அதில் நவீன இலங்கையின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான விளக்கம் உள்ளது.

அதேபோல 1983 ஆம் ஆண்டிலிருந்து தீவிரம்பெற்ற தமிழர்களின் ஆயதப் போராட்டம் குறித்தும் இந்த ஆவணத்தில் கூறப்பட்டது.

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

திரிப்போலி படைப்பிரிவு 

இந்த ஆவணத்தில் முக்கிய சாட்சியாளராக தோன்றும் ஆசாத் மௌலானா ராஜபக்சக்களுக்குரிய மொழிபெயர்ப்பாளராகவும் உதவியாளராகவும் சுமார் 20 வருடங்கள் பணியாற்றியவர்.

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் | Sri Lanka S Easter Bombings C4Dispatches

இவரது சாட்சியத்தில் ராஜபக்சக்கள் தமது அரசியல் எதிரிகளை அடக்க திரிப்போலி படைப்பிரிவு எனப்படும் இரகசிய குழுவை உருவாக்கியதாகவும் கோட்டாபய இந்தப்பிரிவை நிறுவ உத்தரவிட்டபோது தான் அந்த அறையில் இருந்ததாகவும் ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.

அத்துடன், ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முதல் வருடமான 2018 இல், சஹ்ரானின் தேசிய தௌவீத் ஜமாத் உறுப்பினர்களுக்கும் ராஜபக்சவின் இராணுவ உளவுத்துறையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்தவும் தானே உதவியதாகவும் குறிப்பிட்டார்.

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

சனல் - 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான் - சுரேஷ் சலே! அம்பலமாகும் உண்மைகள் (Video)

குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை

தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்தும் இதுகுறித்து சுரேஷ் சாலேயின் இராணுவ உளவுத்துறை; நடவடிக்கையை எடுக்கப்படவில்லை எனவும் இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் | Sri Lanka S Easter Bombings C4Dispatches

இப்போதும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகமாக உள்ள சாலே குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தடுத்தமைக்கான ஆதாரம் இருப்பதாகவும் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

ஆகமொத்தம் ராஜபக்ச குடும்பம் மீண்டும் இலங்கையில் அதிகாரத்தை பெறுவதற்காக சஹ்ரானின் தேசிய தௌவீத் ஜமாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் உதவி பெறப்பட்ட சதி இருந்ததை இந்த ஆவணம் ஆதாரப்படுத்தியுள்ளது.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026