நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது தமிழ் அரசியல் கைதிகளின் வாக்குமூலம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தினை கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதிகளான மா. இளஞ்செழியன், இராமகமலன் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
லொகான் ரத்வத்தயால் மிரட்டப்பட்ட கைதிகள்
இதன்போதே அவர்களால் 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தொடர் விளக்கத்திற்காக எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.
குறித்த அரசியல் கைதிகளுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகியிருந்தார். அரசியல் கைதிகளுக்கு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து கடந்த சில மதங்களுக்கு முன்னர், முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்த துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
