நாட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்...! வெளியான தகவல்
2026ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000ஐக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, பெப்ரவரி 01ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 159,339 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள்
இந்தக் காலப்பகுதியில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளில் இந்தியா 26,096 (16%) பயணிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் (17,807), ரஷ்யா (12,607), ஜேர்மனி (12,309) மற்றும் சீனா (11,560) ஆகிய நாடுகள் அதிக வருகையைப் பதிவு செய்துள்ளன.

இதன்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 436,666 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மொத்த வருகையில், இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மாத்திரம் 78,157 எனப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |