இலங்கைக்கு வந்து குவியும் மில்லியன் கணக்கிலான சுற்றுலாப்பயணிகள்
இலங்கைக்கான (Sri Lanka) வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் 69,825 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்தியா முதலிடம்
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 966,825 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இம்மாத இறுதியில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இந்த மாதத்தில் இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 18,794 என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இரண்டாவது இடத்தில் பிரித்தானியாவும், மூன்றாவது இடத்தில் சீனாவும், நான்காவது இடத்தில் மாலைதீவும், ஐந்தாவது இடத்தில் அவுஸ்திரேலியாவும் அமைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
![Gallery](https://cdn.ibcstack.com/article/6da796ec-c877-4354-bc08-ea1db5989623/24-6675358436612.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள்](https://cdn.ibcstack.com/article/6a2df536-6236-4cba-8f99-2439b81db733/24-667d3eb68c81c-md.webp)
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 2 மணி நேரம் முன்
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)