ரத்து செய்யப்படும் வசதி: தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
பல தொடருந்துகளில் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் வாய்ப்பை இடைநிறுத்த இலங்கை தொடருந்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, காலை 5.55 மணிக்கு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பதுளைக்கு புறப்படும் போடி மெனிகே, காலை 8.30 மணிக்கு கோட்டைலிருந்து பதுளைக்கு புறப்படும் கண்டியன் மெனிகே, மாலை 3.45 மணிக்கு கோட்டையிலிருந்து தலைமன்னாருக்கு புறப்படும் தொடருந்து மற்றும் பதுளையிலிருந்து கோட்டைக்கும் தலைமன்னாரிலிருந்து கோட்டைக்கும் செல்லும் தொடருந்துகளில் மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதி நீக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
மக்களுக்கு சிரமம்
மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதி நீக்கப்பட்ட பிறகு, அந்த பெட்டிகள் மூன்றாம் வகுப்பு பொது பெட்டிகளாக இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த மூன்றாம் வகுப்பு இருக்கை முன்பதிவு வசதிகளை நீக்குவது, சாதாரண மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று தொடருந்து தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |