போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை - கடுமையான அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்!

United Nations Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka
By Kalaimathy Jul 23, 2022 06:15 AM GMT
Report

சிறிலங்காவின் போராட்டக்காரர்கள் மீது தேவையில்லாத வன்முறைகள் நடப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான தேவையற்ற பலப்பிரயோகத்தை வன்மையாகவும் கண்டித்துள்ளது.

மற்றும் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் சங்கத்தின் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று கடுமையான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயற்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநிறுத்துவது அவசியம்

போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை - கடுமையான அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்! | Sri Lanka United Nation Government Gotabaya Ranil

மேலும், சிறிலங்காவின் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதையடுத்து, நாட்டின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவை தேர்வு செய்ய சிறிலங்கா நாடாளுமன்றம் துரித நடவடிக்கை எடுத்தது.

அதேபோன்று, ஜனநாயகம், அமைதியான மற்றும் ஒழுங்கான மாற்றத்தின் செயல்பாட்டில் உள்ள இலங்கை குடிமக்களின் எண்ணம், கருத்து சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதன் அவசியத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக் காட்டியுள்ளது.

அதுமட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதையில் கொண்டு செல்வதற்கு, உள்நாட்டுச் சூழ்நிலையின் அவசரத் தேவைக்கு, சீர்திருத்தங்களின் கட்டமைக்கப்பட்ட திட்டத்தை விரைவாக நிறுவி செயல்படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் எப்பொழுதும் இலங்கை மக்களுக்கு ஆதரவு

போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை - கடுமையான அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்! | Sri Lanka United Nation Government Gotabaya Ranil

இச்சூழலில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது இன்றியமையாதது என்றும் சிறந்த பண்புகளுடனான நிர்வாகத்தை வளர்ப்பது மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேம்படுத்துதல் அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்சி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட இலங்கை மக்களுக்கு ஆதரவான அனைத்து முயற்சிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

பல ஆண்டுகளாக, ஐரோப்பிய ஒன்றியமும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை மக்களுக்கு ஒரு பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான உதவிகளை வழங்கியுள்ளன.

GSP+ இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது

போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை - கடுமையான அறிக்கை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்! | Sri Lanka United Nation Government Gotabaya Ranil

GSP+ திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒற்றைச் சந்தைக்கான முன்னுரிமை சலுகையை 2017 இல் மீண்டும் அறிமுகப்படுத்தியமை இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது.

எனவே, புதிய அரசாங்கம் அதன் GSP+ உறுதிமொழிகளுக்கு முழுமையாக இணங்கிச் செயல்படும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்க்கிறது. தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு திட்டங்கள் (EUR 70 மில்லியன்) இலங்கையின் மிக முக்கியமான தேவைகளுடன் சீரமைக்கப்படுகின்றன.

இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு சிவில் பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் மருந்துகளை வழங்குவதுடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக, உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், சென்னை, India

10 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, கோப்பாய், கொழும்பு

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2014
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்

17 May, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

14 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

09 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சூராவத்தை

15 May, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Paris, France

14 May, 2023
22ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பலெர்மோ, Italy

15 May, 2022
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024