மாவையை தொடர்புகொண்ட ரணில் : கோட்டாபய - பசிலால் புதிய நெருக்கடி
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்பதற்கு முன்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜராவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமராக ரணில் பதவி ஏற்பதற்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு தான் பிரதமராக பதவியேற்ப்பதாக அறிவித்தது உண்மை.
பிரதமராக ரணில் பதவி ஏற்பதற்கு சற்று முன்பதாக தமிழரசுக்கட்சியின் தலைவர் தொலைபேசியில் அழைத்து, இப்படி பிரதமராக தன்னை பதவி ஏற்குமாறு ஒரு அழைப்பு இருக்கிறது. நான் அதை ஏற்றுகொள்ளலாம் என நினைக்கின்றேன்.
அப்படி ஏற்றுகொண்டால் உங்களுடைய விடயங்களையும் நான் கையாளலாம் என்று நினைக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை காணொளியில் காண்க,