கனடாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கைத் தமிழர்
கனடாவின் (canada) ரொரன்ரோ நகரின் பிக்கறிங் பகுதியில் பல ஆண்டுகளாக இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமைகளின் சூத்திரதாரியாக இலங்கைத் தமிழர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தமிழ்பூர்வீகத்தைச் சேர்ந்த 44 வயதான மதப்பிரசாரகர் மற்றும் மதக்கற்கைளை வழங்கும் நபரான பிரவீன் ரஞ்சன் என்பவர் மீதே யோர்க் பிராந்திய காவல்துறை இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
மத ஆய்வுகள் என்ற போர்வையில் பாலியல் வன்முறை
மத ஆய்வுகள் என்ற போர்வையில் குறித்த சந்தேகநபர் இந்த பாலியல் வன்முறைகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள காவல்துறை அவர் மீது ஏழு, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளையும் சுமத்தியுள்ளது.
கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் 2024 ஆண்டுவரை, பிக்கரிங் மற்றும் மார்க்கம் பகுதிகளில் இவர் நடத்திய ஆன்மீகக் கற்கை அமர்வுகளின் போது ஒருவர் ஆறு முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அதேபோல கடந்த டிசம்பரில் இன்னொருவர் இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட இவர் மீதான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
இவர்மீது பாலியல் வன்முறை முறையீடுகளை வழங்கிய இரண்டு முறைப்பாட்டாளர்களின் அடையாங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் இந்த முறைப்பாட்டாளர்கள் விபரங்கள் எதுவும் தெரியவரவில்லை.
இதற்கிடையே சந்தேக நபரான பிரவீன் ரஞ்சனின் நிழற்படத்தை வெளியிட்டுள்ள காவல்துறை இவரது பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் எனவும் ஐயம் வெளியிட்டுள்ளது.
அவ்வாறாக பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து தகவல்களை வழங்கவேணடும் எனவும் அவ்வாறு வழங்கப்படும் விபரங்களின் இரகசியம் பாதுகாப்பபடும் எனவும் காவல்துறை உறுதியளித்துள்ளது.
you may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
