வெளிநாடொன்றில் இலங்கை பெண்ணின் மோசடி: 33 வருடங்களின் பின்னர் கண்டுபிடிப்பு
குவைத்(kuwait)நாட்டில், இலங்கைப் பெண் ஒருவர் போலி கர்ப்பம், ஆள்மாறாட்டம் மற்றும் தவறான தகவல்கள் மூலம் குவைட் குடியுரிமையை மோசடியாக பெற்றதை அந்நாட்டு அதிகாரிகள்33 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.
கொஸ்தா எனப்படும் குறித்த பெண், 1992ல் வீட்டுப் பணியாளராக குவைத்தில் பணிபுரிந்து, 1994ல் நாடுகடத்தப்பட்டார்.
மீண்டும் 1996ல் புதிய அடையாளத்துடன் திரும்பி வந்து, குவைத் நாட்டவரான டாக்ஸி ஓட்டுநரை திருமணம் செய்தார்.
வெளிநாட்டு பெண் குவைத் குடியுரிமைக்கு விண்ப்பிப்பது எப்படி
குவைத்தின் தேசிய சட்டத்தின் பிரிவு 8 இன் கீழ், ஒரு வெளிநாட்டுப் பெண் ஒரு குவைத் ஆணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
அவர் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி, மற்றொரு இலங்கை பெண்ணின் குழந்தையை தன்னுடையதென பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் 2000 ஆம் ஆண்டில் குடியுரிமை பெற்ற இவர், 2008ல் விவாகரத்து பெற்றார்.
அதன்போது அவர் உண்மையை கூறியிருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மரபணு சோதனை மூலம் வெளியான உண்மை
2021 ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மரபணு சோதனை மூலம் அந்த குழந்தையுடன் இருவருக்கும் தொடர்பில்லையென உறுதி செய்யப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் கொஸ்தா மற்றும் அவரது வளர்ப்பு மகளின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து, குவைட்டில் குடியுரிமை மறுபரிசீலனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
