அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு

Election Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Shalini Balachandran Sep 14, 2024 09:56 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) முழு நாட்டிலும் வன்முறையை ஏற்படுத்தியுள்ளதுடன் அவரால் தற்போது ஒரு பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 51 ஆவது மக்கள் வெற்றி பேரணி நேற்றையதினம் (13) ஹபராதுவ (Habaraduwa ) நகரில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

மக்கள் விடுதலை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாச இந்த நாட்களில் வன்முறையை ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக அநுர குமார திசாநாயக்கவும் மேலும் சிலரும் கூறிக்கொண்டு திரிகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை இன்று மக்கள் விடுதலை முன்னணியின் வன்முறைகள் மற்றும் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (University of Sri Jayewardenepura) மூடப்பட்டிருக்கின்றது.

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு | Srilanka 2024 President Election Updates

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான பல வெகுஜன அமைப்புகளின் கூட்டத்திற்கு இடை நடுவில் புகுந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தடிகள் பொல்லுகளால் தாக்கியிருக்கின்றார்கள்.

புள்ளடிக்கு பகரமாக குண்டுகளையும் துப்பாக்கி ரவைகளையும் பயன்படுத்தி, துப்பாக்கி முனையில் வன்முறையை ஏற்படுத்தி, பேப்பர் துண்டு ஒன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கின்ற யுகத்திற்கு அநுரகுமார நாட்டை கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.

ரணிலும் (Ranil Wickremesinghe) அநுரவும் சேர்ந்து மேற்கொள்கின்ற பொறிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் போட்டி களத்தில் இருக்கின்றார்.

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதி தேர்தல் 

ஒரு வேட்பாளர் அவரே தோல்வி அடைவார் என்று கூறுவது இதுவரையும் கேட்காத ஒரு விடயமாகும் இது ஒரு புதுமையாக இருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்க நாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக அன்றி அநுரகுமார திசாநாயக்கவை கையில் தாங்கிக் கொள்வதற்காகவே செயற்பட்டு வருகிறார்.

அநுரவின் செயற்பாட்டால் மூடப்பட்ட பல்கலைக்கழகம் : சஜித் குற்றச்சாட்டு | Srilanka 2024 President Election Updates

அவர் அநுரவின் ஆதரவாளராக இருக்கின்றார் கடந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணில் விக்ரமசிங்க தன்னை தோல்வியடைய செய்ய முயற்சி செய்தார்.

இந்த முறை தேர்தலின் போதும் தன்னை தோல்வியடைய செய்யவே முயற்சி செய்கின்றார் ரணில் மற்றும் அநுர என்போர் இருதரப்பினர் அல்ல.

இவர்கள் ஒரே அரசியல் கும்பல் இந்தக் கும்பலுக்கான தேவை நாட்டைக்கட்டி எழுப்புவது அல்ல 220 இலட்சம் மக்களின் மீதும் வரிச் சுமையை அதிகரிப்பதாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பாடசாலை தவணை - கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

புதிய பாடசாலை தவணை - கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025