வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..!

Sri Lankan political crisis Northern Province of Sri Lanka Political Development Current Political Scenario
By Shalini Balachandran Apr 05, 2024 11:02 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

இணைந்த வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதையும் நாம் இந்த நாட்டின் சம பிரஜைகள் என்பதையும் ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அதன் தலைவருடைய பேச்சு வெளிப்படுத்தியிருப்பதாக ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் 13 ஆவது அரசியலமைப்பு அதிகாரத்தையே தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வாக தர தயாரில்லை என்பதையும் அரசியல் உரிமைப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு உள்ளது என்பதையும் அவர்கள் நிராகரித்திருப்பதையே அவருடைய பேச்சு மிகத் துல்லியமாக காட்டுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த தகவலை அவர் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (05.04.2024) நடந்த ஊடக சந்திப்பின் போதே குறிப்பிட்டுள்ளார்.

அரச பேருந்து சாரதியின் பொறுப்பற்ற செயல்! மயிரிழையில் உயிர் தப்பிய பெண்

அரச பேருந்து சாரதியின் பொறுப்பற்ற செயல்! மயிரிழையில் உயிர் தப்பிய பெண்


தமிழ் மக்களின் அபிலாசை

இது தெடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை என்பது வெறும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி மட்டுமல்ல அவர்களுக்கு அரசியல் உரிமைப் பிரச்சினையே மிகவும் பிரதானமானது என்பதையும் ஜேவிபி அறியாதது அல்ல.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..! | Srilanka North Jvp Citizen Political Issues

இலங்கை வரலாற்றில் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் மற்றும் இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களுக்கான உரிமைப் பிரச்சினை உண்டென்பதை எடுத்துக்காட்டியிருக்கின்ற சூழ்நிலையிலும் யாழ்ப்பாணம் வந்த ஜேவிபி தலைவர் அனுர குமார திஸாநாயக்க 13 தருகின்றோம், 13 பிளஸ் தருகின்றோம் மற்றும் சமஸ்டி தருகின்றோம் என்று கொடுக்கல் வாங்கல் செய்ய வரவில்லை என திமிராகப் பேசிச் சென்றிருக்கின்றார்.

அத்துடன் தமிழ் மக்களின் அபிலாசைகளை சற்றும் புரிந்தவராக வெளிப்படுத்தியிருக்காத நிலையில் இப்போது தமிழ் மக்களுக்கு முன்னால் இருக்கும் ஒரே ஒரு குறைந்தளவு அதிகாரமுள்ள 13 ஆவது அரசியலமைப்பை கூட ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மிகவும் தெளிவாக புலப்படுகின்றது.

தோட்டப்பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான்

தோட்டப்பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட ஜீவன் தொண்டமான்


 கூட்டு முயற்சி

இந்நிலையில், அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணைய வேண்டும் மற்றும் புதிய பாதைக்கு செல்ல வேண்டும் என ஜேவிபியினர் கூறுவது அதிபர் தேர்தலுக்கான தமிழ் வாக்கு வங்கியை இலக்குவைத்தே என்பது புலனாகின்றது.

இதேநேரம் இந்தியாவுக்கு சென்றிருந்த ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க வடக்கு கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பாகவோ எல்லை தாண்டும் இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல் தொடர்பாகவோ அங்கு பேசியிருக்கவில்லை.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..! | Srilanka North Jvp Citizen Political Issues

அதேபோன்று குடாநாட்டுக்கு வந்திருந்தபோதும் கூட வடக்கு கடற்றொழிலாளர்களுடைய பாதிப்புகள் தொடர்பாக எந்தவிதமான அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

மாறாக எடுத்தற்கெல்லாம் இந்திய எதிர்ப்பு பேசிவந்த ஜேவிபி தற்போது அதிலிருந்து விலகி மௌனம் சாதித்துவருவதும் ஒருவித சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

இஸ்லாமிய இளைஞர்களை அழைத்துவந்து அழித்தார்களா? IS இன் அச்சம்தரும் மறுபக்கம்!!

இஸ்லாமிய இளைஞர்களை அழைத்துவந்து அழித்தார்களா? IS இன் அச்சம்தரும் மறுபக்கம்!!


இறக்குமதி

இந்திய பருப்பை உண்ண மாட்டோம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகளில் ஏறமாட்டோம் மற்றும் தீவுப் பிரதேசங்கள் இந்தியாவுக்கு தாரைவார்க்கப்படுகின்றது என விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தவர்கள் இந்த ஜேவிபியினர்.

ஆனால் அதிபர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவ்விடயத்தில் அமைதிகாத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயக நிலப்பரப்பு என்பதை ஏற்க மறுக்கும் ஜேவிபி..! | Srilanka North Jvp Citizen Political Issues

அதேபோன்று கச்சதீவு விவகாரத்திலும் அது இலங்கைக்கே சொந்தம் என நாம் வெளிப்படுத்தியிருந்த போதும் ஜேவிபி அது தொடர்பாக எவ்வித கருத்தையும் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறான நிலையில் எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பார்களா எனவும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கீரிமலை பகுதி காணியை அளவிட ரகசியமாக வந்த அதிகாரிகள்! மக்களுடன் வாக்குவாதம்

கீரிமலை பகுதி காணியை அளவிட ரகசியமாக வந்த அதிகாரிகள்! மக்களுடன் வாக்குவாதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026