இலங்கையர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி! இனி பால் தேநீரும் இல்லை
srilanka
tea
shocking
peoples
milk powder
By S P Thas
பால் தேநீர் விற்பனை செய்வதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயெ இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், அதனை நுகர்வோரினால் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
சிற்றுண்டிசாலைகளின் பிரதான வருமான மார்க்கமாக பால் தேநீர் விற்பனை காணப்பட்டதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பால்மா தட்டுப்பாடு மற்றும் ஊழியர்களுக்காக சம்பள கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தாம் கடந்த காலங்களில் எதிர்நோக்கியமையினால், சில சிற்றுண்டி உரிமையாளர்கள் பால் தேநீர் விநியோகத்தை நிறுத்தியிருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
You may like this
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்