அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் - பிரதமர் தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய காவல்துறை மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் இந்தவிடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
புதிய காவல்துறை மா அதிபரின் பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால் அரசியலமைப்பு பேரவையை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பதவிக் காலம் நிறைவு

காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் பதவிக் காலம் முடிந்து – அவருக்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு முடிந்தும் 11 நாட்கள் ஆகின்றன.
இன்னும் புதிய காவல்துறைமா அதிபர் நியமிக்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இப்படி காவல்துறைமா அதிபர் ஒருவர் இல்லாமல் காவல்துறை திணைக்களம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த காவல்துறைமா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதமர் இதனை உறுதிசெய்துள்ளார்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்