துபாய் - கொழும்பு விமானங்களை ரத்து செய்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ்!
சிறிலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்பு மற்றும் துபாய் இடையே இயங்கும் UL231 மற்றும் UL232 விமானங்கள் 2026 மார்ச் 21 முதல் 24 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகள் தங்களது விமான நிலைமை தொடர்பான புதுப்பிப்புகளை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முறையாகச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
உதவி தேவையான பயணிகள்
உதவி தேவையான பயணிகள், இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்திலும், சர்வதேச அழைப்புகளுக்கு +94 11 777 1979 என்ற எண்ணிலும் உள்ள உலகளாவிய தொடர்பு மையத்தை தொடர்புகொள்ளலாம்.

மேலும், அருகிலுள்ள விமான நிறுவன அலுவலகம் அல்லது டிக்கெட் பெற்ற பயண முகவரையும் தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டமையால் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு விமான நிறுவனம் வருந்துவதாகவும், பயணிகளின் பொறுமைக்கும் புரிந்துகொள்ளுதலுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |