நாடு திரும்பும் இலங்கை ஏதிலிகள் கைதுசெய்யப்படும் விவகாரம் : தமிழ் எம்.பி கோரிக்கை

Refugee Sri Lankan Peoples India NPP Government
By Sathangani Aug 20, 2025 10:34 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கை ஏதிலிகளை கைதுசெய்வதை விடுத்து அவர்கள் குறித்து ஒரு பொறிமுறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (20) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவிற்கு ஏதிலிகளாக சென்றவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் சென்றவர்கள் இந்தியாவில் உள்ள ஏதிலிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டு தற்போது தமது சுயவிருப்பின் பேரில் இங்கு பலர் வந்துகொண்டிருக்கின்றனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்தியாவில் இருந்து தமது சுயவிருப்பின் பேரில் தங்களுடைய பூர்வீக நிலங்களுக்கு திரும்பிய ஏதிலிகள் ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான நிறுவனத்தின் அனுசரணையுடன் இங்கு வந்திருக்கின்றார்கள்.

அவர்கள் வந்து இங்கு குடியேற முற்பட்ட போது பல பிரச்சினைகளை சந்தித்தார்கள். அவர்களுடைய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய சொந்த நிலத்திற்கு போகமுடியவில்லை.

30 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு வந்தவர்களுக்கு தொழில் இல்லை, இந்தியாவிலே படித்துவிட்டு வந்த அவர்களுடைய பிள்ளைகளுக்கு இங்கு வேலைவாய்ப்பில்லை. தொழில் செய்வதற்கான எந்த முதலீடும் வழங்கப்படவில்லை.

அவர்கள் இந்திய அரசினால் கொடுக்கப்பட்ட உதவிகளையும், ஐக்கிய நாடுகள் சபையின் ஏதிலிகளுக்கான நிறுவனம் கொடுத்த 25,000 ரூபாவை வைத்து ஒரு சில மாதங்கள் இலங்கையில் தங்கிவிட்டு இங்கு வாழ முடியாத சூழலிலே மீண்டும் அகதிகளாக தோணிகளில் இந்தியாவிற்கு போயிருக்கின்ற வரலாறு உண்டு.

ஆனால் இப்போது யுத்தம் முடிந்து 16 ஆணடுகள் கடந்துள்ள நிலையில் சுயவிருப்பின் பேரில் இங்கு வந்தவர்களை இப்போது கைது செய்வது ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியிருக்கின்றது.

இது தொடர்பில் ஒரு சில நாட்களுக்கு முதல் ஜனாதிபதியுடன் பேசிய போது, விடயத்திற்கு சம்மந்தமான அமைச்சருக்கு இது பற்றி அறிவிப்பதாகவும் அவர்களுடன் பேசும்படியும் சொன்னார்.

குறிப்பாக எமது நாட்டிற்கு திரும்பி வந்த யாழ்ப்பாணத்திலே 06.08.2025, 28.08.2025 பலாலி விமா நிலையத்திலும் 12.08.2025 கட்டுநாயக்க விமான நிலையத்திலும் 30 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் இருந்த இந்திய அரசாங்கத்தினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், இலங்கையின் துணைத்தூதுவராலயத்தில் கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் ஐ.நாவின் உதவியோடு வந்தவர்கள் சட்டவிரோதமாக 35 வருடங்களுக்கு முதல் நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர்.

எதற்காக இந்தக் கைதுகள் நடைபெறுகின்றது. யுத்த காலத்தில் கூட இந்தக் கைதுகள் நடக்கவில்லை. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வாறு நடக்கின்றது என்றால் ஏதாவது உள்நோக்கம் இருக்கின்றது என நான் கருதுகின்றேன். 

இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுபவர்களை பாதுகாப்பதும் அவர்களை கண்ணியமாக நடத்துவதும் இந்த அரசாங்கத்தினுடைய பொறுப்பு. மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களை கைதுகளில் இருந்தும் சட்டநடவடிக்கைகளில் இருந்தும் விலக்கி விடுமாறு கோருகின்றேன்.

அவர்களை கைது செய்வது ஒரு மனிதாபிமானமற்ற செயல். ஆகவே அரசாங்கம் ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.


யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி வலைவீச்சு! வெளியிடப்பட்ட புகைப்படம்

வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி வலைவீச்சு! வெளியிடப்பட்ட புகைப்படம்

அரைகுறை ஆடையுடன் அரசாங்கத்தை சாடிய தபால் ஊழியர்

அரைகுறை ஆடையுடன் அரசாங்கத்தை சாடிய தபால் ஊழியர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026