சிறிலங்கா இராணுவம் வெளியிட்ட அறிவிப்பு
சிறிலங்கா இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சில ஆர்வமுள்ள தரப்பினர் தவறாக வழிநடத்தும் மற்றும் புனையப்பட்ட விளக்கங்களை அளித்து, ஆதாரமற்ற, மற்றும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுகளை பிரசாரம் செய்வதன் மூலம் தீவு முழுவதும் பணியாற்றும் இராணுவத்தையும் அதன் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களையும் இழிவுபடுத்தவும் களங்கப்படுத்தவும் முயற்சிப்பதாக கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
படையினர் "வன்முறையை ஏற்படுத்த" முயற்சிப்பதாகவும், "தாக்குதல் பயிற்சியில்" ஈடுபட்டுள்ளதாகவும் ஊகிக்கிறார்கள், இது முற்றிலும் தவறானது. புனையப்பட்ட மற்றும் அடிப்படையற்றது. தெளிவாகப் பார்த்தால், இன்றுவரை எந்த ஒரு படையினர் கூட அந்த பதட்டமான சூழ்நிலைகளில் ஈடுபடவில்லை.
இராணுவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அந்த மோசமான நடவடிக்கைகளை இராணுவம் மிகவும் வலுவாகவும் திட்டவட்டமாகவும் நிராகரிக்கிறது.
அதே சமயம் படையினர் மீது முழு நம்பிக்கையை வைக்குமாறு இந்த நாட்டின் குடிமக்களை வலியுறுத்துகிறது. தற்போது பணியாற்றும் படையினர் அதிக பயிற்சி பெற்றவர்களாகவும், தொழில் ரீதியில் தகுதியுடையவர்களாகவும், எந்தவொரு பாதுகாப்புச் சவாலையும் எதிர்கொள்ள ஏற்றவர்களாகவும் இருப்பதால், இந்தச் சூழ்நிலையில், அவர்களுக்கு உதவி செய்ய காவல்துறை எங்களை அழைத்தால் மட்டுமே நாம் அதில் ஈடுபடுவோம்.
இதேபோல், இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக அனைத்து முகாம்களிலும் நன்கு வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி தொகுதிகள் தடையின்றி தொடர்கின்றன.
இந்த முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க, நாட்டையும் அதன் மக்களையும் 24 மணி நேரமும் பாதுகாப்பதில் இராணுவம் உறுதியாக இருப்பதால், அந்த திட்டமிட்ட சூழ்ச்சிகள் மற்றும் துரோக சைகைகளால் பொதுமக்கள் தூண்டப்படவோ அல்லது தவறாக வழிநடத்தப்படவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
போராட்டகாரர்களுக்கு எதிராக வன்முறையை துண்டி விட இராணுவம் தயாராகி வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ நேற்று தெரிவித்திருந்தார்.
கடவத்தையில் உள்ள இராணுவ கொமாண்டோ படைப் பிரிவின் முகாமில் சேவையாற்றும் படையினருக்கு போராட்டகாரர்களை அடக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் போராட்டகாரர்கள் எழுப்பும் கோஷங்களை எழுப்பியவாறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
அதேவேளை போராட்டகாரர்களை அடக்க அரசாங்கம் வழங்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என சரத் பொன்சேகா, இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 10 மணி நேரம் முன்
