அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் (Jaffna) - அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் (01) குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 06 பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன.
மீட்கப்பட்ட கலசங்கள்
இந்த விடயம் குறித்து ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் ஊர்காவற்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ததுடன் 06 கலசங்களையும் மீட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
