மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம்

United Human Rights United Nations Tamils Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Shadhu Shanker Dec 02, 2023 07:48 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த மற்றும் அதில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்த மற்றும் அதில் பங்கேற்றவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளும் குடிசார் செயற்பாட்டாளர்களும் குறித்த கைது நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில், தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

பயங்கரவாத தடைச்சட்டம்

 தமிழர் தாயகப்பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டதை தொடர்ந்து, அதில் பங்கேற்றோர், அதனை ஏற்பாடு செய்தோர் உள்ளிட்ட 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம் | Stop Using The Anti Terrorism Act In Sri Lanka

அத்துடன், இந்த சட்டத்தின் கீழ் மேலும் 20 பேர் கைது செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள், மனித உரிமைகளை மீறும் சட்டத்தின் பாவனையை நிறுத்தி வைப்பது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் வாக்குறுதிகளுக்கு மாறானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

ஐ.நா வேண்டுகோள்

இந்த நிலையில், இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாவனையை கைவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு கைது : ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் கடும் கண்டனம் | Stop Using The Anti Terrorism Act In Sri Lanka

இதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்த வகையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைது நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச தரநிலை மற்றும் மனித உரிமை விதிகளுக்கு அமைய குறித்த சட்டம் மாற்றப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024