கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி!
டி20 உலகக் கோப்பையின் இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற முதல் போட்டியில் குழு A ,இல் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை எதிர்த்தாடியது.
இதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸதான் பந்து வீச்சை தொடங்கியது.
அதன்படி நெதர்லாந்து முதலில் துடுப்படுத்தாடிய நிலையில் 19.5 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் வெற்றி
அந்த அணியின் தொடக்க வீரர் மைக்கெல் லெவிட் 15 பந்துகளில் 3 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டத்துடன் 24 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
மேலும், பாஸ் டி லீட் 30 ஓட்டங்களையும், ஸ்காட் எட்வர்ட்ஸ் ஓட்டங்களையும், , கொலின் ஆக்கர்மேன் ஓட்டங்களையும், அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டும் முகமது நவாஸ், அப்ரார் அகமது, சைம் ஆயுப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 148 ஓட்டங்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் வெற்றிக்கு 12 பந்துகளில் 29 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரிலேயே 24 ஓட்டங்களை பகீம் அஷ்ரப் விளாசினார்.
இதில் கடைசி ஓவரில் 5 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணி தொடரின் முதல் வெற்றியை தனதாக்கியது. கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 29 ஒட்டங்களை குவித்த பகீம் அஷ்ரப் போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 2 மணி நேரம் முன்