ஹோர்முஸ் நீரிணை விரைவாக திறக்கப்பட வேண்டும்! சீன ஜனாதிபதியின் முதல் பகிரங்க அறிக்கை
ஈரான் போர் குறித்த தனது முதல் பகிரங்கக் கருத்துக்களை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளியிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மீதான பதற்றம் குறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது சர்வதேசத்தின் முக்கிய நீர்வழிப்பாதை வழியாகப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அவர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
சீன அறிக்கை
இந்த விடயத்தை வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"உடனடி மற்றும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு சீனா அழைப்பு விடுக்கிறது.
அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரிக்கிறது. மேலும் சர்ச்சைகள் அரசியல் மற்றும் இராஜதந்திர வழிகளில் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பொது நலனுக்காக, ஹோர்முஸ்இயல்பான போக்குவரத்திற்காகத் திறந்திருக்க வேண்டும். இதனால் சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை
சீனா மத்திய கிழக்கில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கின்றது. மேலும், மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எதிர்காலத்தையும் தலைவிதியையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை சீனா ஆதரிக்கிறது.
இதன் மூலம், பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலையை மத்திய கிழக்கு நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஹோர்முஸ் வழியாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகின் மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருப்பதால், அந்த நீரிணையில் தடையற்ற போக்குவரத்தை மீட்டெடுப்பது அதற்கு முக்கியமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |