அரச தலைவரின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்!
அரச தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள காமினி செனரத் பதவியேற்புடன், அரச தலைவர் அலுவலகத்தின் பணிகளை மேலும் வினைத்திறன்மிக்கதாக மாற்றும் நோக்கத்தில், கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த ஊடக வெளியீட்டில்,
அதன்படி, அரச தலைவர் நிதியம், மக்கள் தொடர்புப் பிரிவு உள்ளிட்ட மக்களுக்கு நேரடியாகச் சேவைகளை வழங்குப் பிரிவுகளின் பதவிகளுக்குப் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரச தலைவரின் புதிய செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் நிர்வாக ரீதியிலான மாற்றங்களின் போது பெயர்களைக் குறிப்பிட்டு, தவறான அர்த்தப்படுத்தல்களை வெளிப்படுத்த சில சமூக ஊடகங்கள் முயற்சித்து வருகின்றமை காணக்கிடைக்கிறது.
அவை உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த ஊடக வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.