அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்

Sri Lanka Politician Sri Lanka Government C. V. Vigneswaran Ministry of justice Sri lanka
By Laksi May 16, 2024 12:34 PM GMT
Report

இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் செயற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச கருத்தரங்கத்திற்கான பிரதம அதிதி உரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே பிரதம நீதியரசர் விடயத்தில் ஒரு தவறிழைக்கப்பட்டது.

நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்

நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்

உயர் பதவி

முன்பு சிரேஷ்ட நீதியரசராக உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் நாகலிங்கம் இருந்தார். அவர் அப்போதைய ஆளுநர் நாயகம் விடுமுறையில் சென்ற போது அவர் சார்பில் பதில் ஆளுநர் நாயகமாக (Governor General) பதவி ஏற்றவர்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் | Supreme Judiciary Of Sl C V Vigneswaran Speech

இந்நிலையில், நீதியரசர் நாகலிங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய பிரதம நீதியரசர் பதவி அப்போது சட்டத்துறைத் தலைமையதிபதியாக (Attorney General) இருந்த எச்.எச்.பஸ்நாயக என்பவருக்கு வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து சட்டத்துறைத் தலைமையதிபதிகளை பிரதம நீதியரசராக நியமிப்பதும் அந்த திணைக்களத்தில் உயர் பதவிகளில் உள்ளோரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவற்றிற்கு நியமிப்பதும் ஒரு வழக்கமாக ஆகிவிட்டது.

இலங்கையிலிருந்து விரைவில் ரஷ்யாவிற்கு அரச தூதுக்குழு: வெளியாகியுள்ள தகவல்

இலங்கையிலிருந்து விரைவில் ரஷ்யாவிற்கு அரச தூதுக்குழு: வெளியாகியுள்ள தகவல்

அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்பு

அதேவேளை, நீதியரசர் துரைராஜாவும் குறித்த திணைக்களத்தில் இருந்தே சிரேஷ்ட நீதிமன்றங்களுக்கு நியமனம் பெற்றவர்.அந்தத் திணைக்களத்தில் வேலை செய்பவர்கள் கடின உழைப்பாளர்கள். அவர்களின் தரத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என் மகன் அந்த திணைக்களத்திலேயே உயர் பதவியில் இருக்கின்றார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் | Supreme Judiciary Of Sl C V Vigneswaran Speech

ஆனால், தமது தொழில் வாழ்க்கை பூராகவும் அரசாங்கம் சார்பில் வழக்குகள் பேசிக் கொண்டிருந்த இவர்களை திடீரென்று மக்கள் சார்பில் நீதிபதிகளாக நியமிப்பது அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்புக்களை அவர்களிடம் இருந்து கொண்டு வராதா என்ற கேள்வி எழுகின்றது.

பலர் அந்தக் காலத்தில் பேசிக் கொண்டது என்னவென்றால் நீதியரசர் நாகலிங்கத்தை விடுத்து சட்டத்துறைத் தலைமை அதிபதியை பிரதம நீதியரசர் பதவிக்கு அப்போது நியமித்தமை ஒரு பௌத்த பெரும்பான்மையினத்தவரை அப் பதவியில் இருத்த வேண்டும் என்ற அரசியல் காரணத்தினாலேயே என்பதாகும்.

அது மாத்திரமன்றி, என் காலத்திலும் இது தான் நடந்தது. எனக்கு ஐந்து வருடங்கள் கனிஷ்டரான சட்டத்துறைத் தலைமையதிபதியான பெரும்பான்மை பௌத்தர் ஒருவர் வெற்றிடம் வந்த போது நேரடியாக நியமனம் பெற்றார்.

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உயர் நீதித்துறை

இருப்பினும், நீதித்துறையில் சட்டத் துறைத் திணைக்கள வழக்கறிஞர்களையோ தனியார் வழக்கறிஞர்களையோ ஒரு குறிப்பிட்ட கால தேர்ச்சியின் பின்னர் நீதிபதிகளாக்குவதே உசிதம் என்று எனக்குப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் | Supreme Judiciary Of Sl C V Vigneswaran Speech

இவ்வாறிருக்கையில், இன்று இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அதற்காக நீதித்துறை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அரசாங்கத்துக்காக உழைத்தவர்களை நேரடியாக நீதித்துறைக்குள் உள்நுழைப்பது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே வெளிக் கொண்டு வருகின்றேன் ” என தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக தலைவர் பிரபாகரனுக்கான வீரவணக்க நிகழ்வு: சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்

முதல் முறையாக தலைவர் பிரபாகரனுக்கான வீரவணக்க நிகழ்வு: சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி