அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன்

Sri Lanka Politician Sri Lanka Government C. V. Vigneswaran Ministry of justice Sri lanka
By Laksi May 16, 2024 12:34 PM GMT
Report

இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் செயற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயத்தை அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சர்வதேச கருத்தரங்கத்திற்கான பிரதம அதிதி உரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் நாடு சுதந்திரம் அடைந்த உடனேயே பிரதம நீதியரசர் விடயத்தில் ஒரு தவறிழைக்கப்பட்டது.

நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்

நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்

உயர் பதவி

முன்பு சிரேஷ்ட நீதியரசராக உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர் நாகலிங்கம் இருந்தார். அவர் அப்போதைய ஆளுநர் நாயகம் விடுமுறையில் சென்ற போது அவர் சார்பில் பதில் ஆளுநர் நாயகமாக (Governor General) பதவி ஏற்றவர்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் | Supreme Judiciary Of Sl C V Vigneswaran Speech

இந்நிலையில், நீதியரசர் நாகலிங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய பிரதம நீதியரசர் பதவி அப்போது சட்டத்துறைத் தலைமையதிபதியாக (Attorney General) இருந்த எச்.எச்.பஸ்நாயக என்பவருக்கு வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து சட்டத்துறைத் தலைமையதிபதிகளை பிரதம நீதியரசராக நியமிப்பதும் அந்த திணைக்களத்தில் உயர் பதவிகளில் உள்ளோரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்றவற்றிற்கு நியமிப்பதும் ஒரு வழக்கமாக ஆகிவிட்டது.

இலங்கையிலிருந்து விரைவில் ரஷ்யாவிற்கு அரச தூதுக்குழு: வெளியாகியுள்ள தகவல்

இலங்கையிலிருந்து விரைவில் ரஷ்யாவிற்கு அரச தூதுக்குழு: வெளியாகியுள்ள தகவல்

அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்பு

அதேவேளை, நீதியரசர் துரைராஜாவும் குறித்த திணைக்களத்தில் இருந்தே சிரேஷ்ட நீதிமன்றங்களுக்கு நியமனம் பெற்றவர்.அந்தத் திணைக்களத்தில் வேலை செய்பவர்கள் கடின உழைப்பாளர்கள். அவர்களின் தரத்தைப் பற்றி நான் எதுவும் கூறவில்லை. என் மகன் அந்த திணைக்களத்திலேயே உயர் பதவியில் இருக்கின்றார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் | Supreme Judiciary Of Sl C V Vigneswaran Speech

ஆனால், தமது தொழில் வாழ்க்கை பூராகவும் அரசாங்கம் சார்பில் வழக்குகள் பேசிக் கொண்டிருந்த இவர்களை திடீரென்று மக்கள் சார்பில் நீதிபதிகளாக நியமிப்பது அரசாங்கத்திற்கு சார்பான தீர்ப்புக்களை அவர்களிடம் இருந்து கொண்டு வராதா என்ற கேள்வி எழுகின்றது.

பலர் அந்தக் காலத்தில் பேசிக் கொண்டது என்னவென்றால் நீதியரசர் நாகலிங்கத்தை விடுத்து சட்டத்துறைத் தலைமை அதிபதியை பிரதம நீதியரசர் பதவிக்கு அப்போது நியமித்தமை ஒரு பௌத்த பெரும்பான்மையினத்தவரை அப் பதவியில் இருத்த வேண்டும் என்ற அரசியல் காரணத்தினாலேயே என்பதாகும்.

அது மாத்திரமன்றி, என் காலத்திலும் இது தான் நடந்தது. எனக்கு ஐந்து வருடங்கள் கனிஷ்டரான சட்டத்துறைத் தலைமையதிபதியான பெரும்பான்மை பௌத்தர் ஒருவர் வெற்றிடம் வந்த போது நேரடியாக நியமனம் பெற்றார்.

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உயர் நீதித்துறை

இருப்பினும், நீதித்துறையில் சட்டத் துறைத் திணைக்கள வழக்கறிஞர்களையோ தனியார் வழக்கறிஞர்களையோ ஒரு குறிப்பிட்ட கால தேர்ச்சியின் பின்னர் நீதிபதிகளாக்குவதே உசிதம் என்று எனக்குப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுகிறதா நீதித்துறை: சந்தேகம் வெளியிட்டுள்ள விக்னேஸ்வரன் | Supreme Judiciary Of Sl C V Vigneswaran Speech

இவ்வாறிருக்கையில், இன்று இலங்கையின் உயர் நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பான நிலையில் இயங்குகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அதற்காக நீதித்துறை அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்று நான் கூறவரவில்லை. அரசாங்கத்துக்காக உழைத்தவர்களை நேரடியாக நீதித்துறைக்குள் உள்நுழைப்பது எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதையே வெளிக் கொண்டு வருகின்றேன் ” என தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக தலைவர் பிரபாகரனுக்கான வீரவணக்க நிகழ்வு: சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்

முதல் முறையாக தலைவர் பிரபாகரனுக்கான வீரவணக்க நிகழ்வு: சகோதரர் வெளியிட்டுள்ள தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016