தாயுடன் முரண்பாடு: தற்கொலை செய்த மகன் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட றெட்பானா பகுதியில் தாயை தாக்கி விட்டு மகன் தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(14) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கணேசன் கேதீஸ்வரன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் பத்து வருடங்களுக்கு முன்னர் மனைவியை பிரிந்து தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இவரது சகோதரி தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளார்.
தாயுடன் முரண்பாடு
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயாருடன் முரண்பட்டதை தொடர்ந்து தாயை தாக்கியுள்ளார். இதனால் தாய் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
கொழும்பில் இருந்து மகள் நேற்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்கு சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
