போலிப் பத்திரங்களைத் தயாரித்து மோசடி செய்த சந்தேக நபர் கைது
கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள சொத்து தொடர்பில் போலி உறுதி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அதன் நிதி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர் நேற்று (15.09.2026) களுத்துறை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
விசாரணைகளில், குறித்த சொத்து தொடர்பில் சந்தேகநபர் போலி ஆவணங்களை தயாரித்து, அவற்றை நீதிமன்ற நடவடிக்கைகளின்போதும் சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சொத்தை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |