யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் : காவல்துறையினரிடம் சிக்கிய மூவர்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மூன்று பேரும் நேற்றையதினம் (21) கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கையின்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூவர் கைது
உதயபுரம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சகோதரர்கள் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அரியாலை நாயன்மார்கட்டை சேர்ந்த 25,28,30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
