பறவைக்காய்ச்சலின் தீவிரம் : அவசரமாக கூடிய சுகாதார அமைச்சு
தற்போதைய பறவைக் காய்ச்சல் நிலைமையை தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அவசர கூட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டமானது சுகாதார செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால (Palita Mahipala) தலைமையில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.
மேற்படி, கூட்டத்தின் போது பறவைக் காய்ச்சலின் அபாயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி பரிசோதனை
அத்தோடு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமானது (MRI) நாடு முழுவதும் உள்ள 20 மருத்துவமனைகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை தினசரி பரிசோதனை செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 12 ஆண்டுகளாக உலக சுகாதார அமைப்பின் பறவைக் காய்ச்சல் வெளிப்புற தர மதிப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் MRI 100% துல்லியத்தைப் பராமரித்து வருகின்றது.
பறவைக் காய்ச்சல்
அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பறவைக் காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் ஒரு தொற்று நோயாவதுடன் இது முதன்மையாக பறவைகளை பாதிப்பதுடன் மற்ற விலங்குகள் மற்றும் மனிதர்களையும் பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |