மீண்டும் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்கல்!
யாழ்ப்பணம் பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடையின் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று (15) இரவு மின்சாரம் தடைப்பட்ட சமயம் இடம்பெற்றுள்ளது.
தையல் கடையின் உரிமையாளரான பாலகுமார் எனும் 44 வயதுடைய நபரே தாக்கப்பட்டதாகவும் பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட கும்பல் அவரது தையல் கடையையும் அடித்து நொருக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வாள்வெட்டு தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகளவான வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
யாழில் சிகை அலங்கரிப்பு நிலையத்தினுள் வாள் வெட்டு - ஒருவர் படுகாயம்
யாழில் தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டுத்தாக்குதல்
மானிப்பாயில் வாள்வெட்டு..! 21 வயதான இளைஞன் காயம்