சீனாவின் அச்சுறுத்தல்..! சர்வதேச சமூகங்களின் உதவியை நாடும் தாய்வான்
தாய்வானில் அதிகரித்து வரும் பிராந்திய பதற்றத்தை தடுக்க சர்வதேச சமூகத்தின் ஆதரவு வேண்டும் என்று தாய்வான் அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, தாய்வானுக்கும் சீனாவிற்கும் இடையிலான பிராந்திய பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தாய்வானின் கோரிக்கை
இது குறித்து தாய்வான் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் நிலைமையை அரசாங்கமும், இராணுவமும் சீனாவின் இராணுவப் பயிற்சிகள் தகவல் போர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிராந்திய பாதுகாப்பு நிலைமையில் அதிகரித்து வரும் பதற்றத்தை தடுக்கவும், ஜனநாயக நாடான தாய்வானை ஆதரிக்கவும் சர்வதேச சமூகத்திடம் நான் அழைப்பு விடுக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாய்வானை சுற்றி பல சீன போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் தாய்வானின் இடைநிலைக் கோட்டைத் தாண்டியதாக சனிக்கிழமை(06) அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.
Our government & military are closely monitoring China's military exercises & information warfare operations, ready to respond as necessary. I call on the international community to support democratic Taiwan & halt any escalation of the regional security situation. pic.twitter.com/uAoDAU2bMV
— 蔡英文 Tsai Ing-wen (@iingwen) August 5, 2022