மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் - பெரும்பான்மையினத்தவரால் உயிர் அச்சுறுத்தல்; பதிவானது முறைப்பாடு!

Batticaloa Sri Lanka Eastern Province
By Kalaimathy Feb 27, 2023 01:01 PM GMT
Report

மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை விவகாரத்தால், பண்ணையாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மயிலத்தமடு மாதவனை பகுதியில் நடமாடும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடும் வெட்டுக்காயங்களும் ஏற்பட்டு, இறந்துள்ள நிலையில்,  பண்ணையாளர்கள், தங்களுக்கும் ஏதும் உயிர் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

கடந்த காலங்களாக மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை பகுதியில், பெரும்பான்மையினத்தவர்களின் அத்துமறிய குடியேற்றம் பேசு பொருளாக இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் தலை தூக்கி உள்ளது.

அத்துமீறிய குடியேற்றம்

மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் - பெரும்பான்மையினத்தவரால் உயிர் அச்சுறுத்தல்; பதிவானது முறைப்பாடு! | Tamil Farmers Batticaloa Mathavanai Human Rights

மாதவனை மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மையினர் அத்துமீறி குடியேற முடியாத நிலையில் நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கின்ற நிலையிலும் குறித்த பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் சோழன் கச்சான் பயிர்செய்கை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்ற சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றார்கள் என அப்பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பயிர்செய்கையில் ஈடுபடுபவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்குள் அத்து மீறி பயிர்செய்வதனால் அப்பகுதிக்குள் நுழையும் கால்நடைகள்  துப்பாக்கி சூட்டிற்கும் வெட்டுக்காயங்களுக்கும் உள்ளாகி உயிரிழந்துள்ளன.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தலைமையில் குறித்த குடியேற்றமானது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருந்த போதிலும் பண்ணையாளர்களின் முயற்சியாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்கு பெற்றலுடனும் வழக்கு தொடரப்பட்டு சிங்கள குடியேற்றத்திற்கான தடை உத்தரவு எடுக்கப்பட்டிருந்தது.

பிள்ளையானின் தலையீடும் ஏமாற்றமே

மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் - பெரும்பான்மையினத்தவரால் உயிர் அச்சுறுத்தல்; பதிவானது முறைப்பாடு! | Tamil Farmers Batticaloa Mathavanai Human Rights

ஆனால் இன்று மீண்டும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்து மீறிய செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மட்டக்களப்பு மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கடந்த காலங்களில் மாதவனை மயிலத்தமடு பகுதிக்கு சென்று அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு அறிந்து, பண்ணையாளர்களுக்கு சார்பாக செயற்படுகின்றார் என்ற காரணத்தினால் அரசாங்க அதிபர் பதவியில் இருந்து இடமாற்றப்பட்டார்.

இந்நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வந்திருக்கின்ற போதும், பெரும்பான்மையினத்தவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான குழுவினர் சென்று இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வை பெற்று தருவதாக கூறி இருந்தும் அவர்களாலும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற சட்டத்தை மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் பேரினவாத இனத்தவர்கள் மேய்ச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை அத்துமறி பிடித்து அதனுள் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு கால்நடைகளின் வாழ்வாதாரத்தை இல்லாது ஒழிக்கும் ஒரு செயற்பாட்டாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயத்தையும் மீன்பிடியையும் கால்நடையையும் நம்பி இருக்கின்ற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் விசனம்

மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் - பெரும்பான்மையினத்தவரால் உயிர் அச்சுறுத்தல்; பதிவானது முறைப்பாடு! | Tamil Farmers Batticaloa Mathavanai Human Rights

மேலும் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் ஒரு இன வன்முறையை தூண்டும் அளவிற்கு இந்த விவகாரம் செல்லும் என்பதில் எவ்வித அச்சமுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இந்த மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாகவும், மகாவலி பிரச்சினைக்கும் மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்றே கூற முடியும் எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


ஆகவே வயிற்று பிழைப்புக்காக செல்லும் பண்ணையாளர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதுடன் அவர்களுடைய உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை தான் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலு்ம மாதவனை மயிலத்தமடு மேச்சல்த்தரை விவகார கள நிலவரம் தொடர்பாக உடனுக்குடன் செய்திகளை ஊடகங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலும், சிறிலங்கா அரசாங்கம், பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் ஒரு முற்றுப்புள்ளி வைக்காதது பெரும் மனவேதனையாக இருக்கின்றது என்று பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026