தமிழ் தலைமைகள் கொழும்பில் முக்கிய பேச்சு (Photo)
தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் இன்று சந்திப்பொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பாக இது நடைபெறுகிறது.
சம காலத்தில், சிறுபான்மைக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும், அதிகளவான கட்சிகள் பங்கேற்கும் சந்திப்பாகவும் இந்தக் கூட்டம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட சந்திப்பு கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முதலான கட்சிகள் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அதில் பங்கேற்றிருந்தன. இதன்போது, அனைத்து கட்சித் தலைவர்களினதும் பங்கேற்புடன் இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, இன்று கொழும்பில் இரண்டாம் கட்ட சந்திப்பு இடம்பெறுவதாகவும், இதனை ரெலோ ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.