உதயநிதி ஸ்டாலின் கைது..! தமிழக அரசியலில் பரபரப்பு: CM விஜயை சீண்டிய விவகாராம்
புதிய இணைப்பு
தமிழக முதல்வர் விஜய்யை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
முதலாம் இணைப்பு
குவிக்கப்பட்ட காவல்துறையினர்
சென்னையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு முன்பாக இன்று காலை முதலே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் பெண்களை விமர்சித்து, உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
கடும் வாக்குவாதம்
அதேபோல உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் உதயநிதி ஸ்டாலின் வீட்டுக்கு திமுக முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சென்றனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் திமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுகவின் வழக்கறிஞர்களும் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.
இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டின் முன்பாக இன்று காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டின் உள்ளே சென்ற காவல்துறையினர், அவரது குடும்பத்தினரிடம் பேசி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |