பிரதமர் மோடியுடனான நேரடி சந்திப்பு : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு

Gajendrakumar Ponnambalam Rajavarothiam Sampanthan Narendra Modi C. V. Vigneswaran
By Vanan Sep 13, 2023 02:31 PM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திப்பதற்கான முயற்சியை கூட்டாக மேற்கொள்வதற்கான அழைப்பை விடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தியப் பிரதமரும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கு இணக்கம் வெளியிடுவார் என சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனின் நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்., தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் , ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியுடனான நேரடி சந்திப்பு : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு | Tamil National Parties Direct Meeting With Pm Modi

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் அடுக்கடுக்காக காணப்படும் உடலங்கள்(இரண்டாம் இணைப்பு)

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் அடுக்கடுக்காக காணப்படும் உடலங்கள்(இரண்டாம் இணைப்பு)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்பது பயனுள்ளதாக இருக்குமா என தாம் யோசனை செய்வதாக இந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தம்மை சந்திக்க நரேந்திர மோடி சம்மதிப்பார் என தாம் உறுதியாக நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பிற்கென புதுடில்லி செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் நரேந்திர மோடி தென்மாநிலங்களுக்குச் செல்லும்போது அவரைச் சந்திக்கலாம் எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் யோசனை தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரானவர் என்ற போதிலும், அரசமைப்பிலுள்ள விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவர் தற்போதைய தருணத்தில் உணர்ந்துகொள்வார் என நம்புவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு நடவடிக்கைக்கான ஒப்புதல்

புலம்பெயர்ந்தவர்களின் தனி இராஜ்ஜியம் : யூதர்களுடைய கொள்கையில் உருவெடுப்பதாக குற்றச்சாட்டு

புலம்பெயர்ந்தவர்களின் தனி இராஜ்ஜியம் : யூதர்களுடைய கொள்கையில் உருவெடுப்பதாக குற்றச்சாட்டு

13ஆவது திருத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு இந்தியாவால் மட்டுமே அழுத்தம் கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்சமயம் மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் இல்லாவிட்டால் அரச திணைக்களங்களை எதிர்க்க முடியாது என்பதுடன், சிறிலங்கா படைகளும் பௌத்த தேரர்களும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியுடனான நேரடி சந்திப்பு : தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு | Tamil National Parties Direct Meeting With Pm Modi

தமது யோசனை அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டால், அனைவரும் கையொப்பமிட்டு அனுப்பக்கூடிய ஒரு கடித நகலை தாம் தயாரிக்கலாமா என்பதைத் தெரிவிக்குமாறும் சி.வி.விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் அனுமதி கோரியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 13ஆவது திருத்தத்தின் பலனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், கூட்டு நடவடிக்கைக்கு தமது ஒப்புதலைக் காட்டுவதற்காகவேனும் தம்முடன் வர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இழிவான அரசியல் கலாசாரம் : மாறவேண்டும் என்கிறார் சுனில் ஹந்துனெத்தி

இலங்கையில் இழிவான அரசியல் கலாசாரம் : மாறவேண்டும் என்கிறார் சுனில் ஹந்துனெத்தி

தாம் யாரும் மோடியைத் தனித்தனியாகச் சந்திப்பதில் பயனில்லை எனக் கூறியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், அனைவரும் ஒப்புதல் அளித்தால் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக சந்திப்பது தொடர்பான தமது இந்த யோசனை குறித்து மூன்று நாட்களுக்குள் பதிலளிக்குமாறும் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களிடம் குறித்த கடிதத்தின் ஊடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026