பிரபல தமிழ்ப் பாடசாலையின் 16 மாணவர்கள் கைது! வெளியாகிய பின்னணி
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
16 பேர்
பதுளை – எல்ல பிரதேசத்தின் 'ரொக்' என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பதுளை பகுதியிலுள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேரே நேற்று (26) மாலை குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பதுளையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போதே, வனத்துக்கு தீ வைத்துள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில் கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.