அடித்துக் கொலை செய்யப்பட்ட தமிழ் இளைஞர் - கொழும்பில் சம்பவம்
Sri Lankan Tamils
Colombo
Sri Lanka Police Investigation
Death Penalty
By Nithusan
கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவமானது நேற்று மாலை கொழும்பு - மோதரையில் (18.08.2023) இடம்பெற்றுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான அருணாசலம் அஜந்தன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த 5 வருடங்களாக குடும்பத்தினருடன் கொழும்பில் தங்கி நின்று வேலை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.
காவல்துறை விசாரணை

நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலிலேயே அவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி