வெடுக்குநாறிமலையில் தமிழ் மக்களின் வழிபாடு குறித்து ரவிகரன் எம்.பி வலியுறுத்து!

Vavuniya Sri Lanka Thurairajah Raviharan
By Harrish Dec 27, 2024 03:05 PM GMT
Report

வவுனியா(Vavuniya) - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ்மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்(T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இன்று (27) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ, பொதுமக்கள் சென்றுவருவதற்கோ எந்த வித தடையுமில்லை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

13 ஆம் திருத்தத்தில் இந்தியாவின் மௌனம் மகிழ்ச்சி அளிக்கின்றது : கஜேந்திரகுமார்

13 ஆம் திருத்தத்தில் இந்தியாவின் மௌனம் மகிழ்ச்சி அளிக்கின்றது : கஜேந்திரகுமார்

 உயர் நீதிமன்றத் தீர்ப்பு

இவ்வாறு அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றபோதும், இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கான பிரதான வீதி மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கமானது அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வெடுக்குநாறிமலையில் தமிழ் மக்களின் வழிபாடு குறித்து ரவிகரன் எம்.பி வலியுறுத்து! | Tamils Allowed Worship At Vedukunarimala Raviharan

அத்தோடு, குறித்த ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்காகச் சென்ற அடியவர்கள் குடிநீர் இன்றி மிகுந்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இதேவேளை, தண்ணீர் தாகத்தால் தவித்த அடியவர்களுக்கு நீர் எடுத்துச்செல்லப்பட்டபோது காவல்துறையினரால் குடிநீர் கோவில் வளாகத்திற்குள் எடுத்துச்செல்லமுடியாது என தடுக்கப்பட்டுள்ளது.

நானும் காலையில் கோவிலுக்கு வழிபாடுகளுக்குச்சென்ற மக்களோடு சென்றிருந்தேன். இந்நிலையில் மாலை வரை தாகத்தால் தவித்து, குடிநீர் வராததால் கோவில் வளாகத்நிலிருந்த நீரோடையில் நீரை எடுத்து அருந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

தமிழர்களின் மனங்களை வென்ற ஒரே சிங்களவர் அநுர : யாழ் மக்கள்

தமிழர்களின் மனங்களை வென்ற ஒரே சிங்களவர் அநுர : யாழ் மக்கள்

பாதுகாப்புக் கூடாரம்

அதனால் குடிநீரைப் பெறுவதற்காகவும், ஆலய வழிபாடுகளுக்கான நீரைப்பெறும் நோக்கிலும் ஆலய நிர்வாகத்தினர் தற்போது ஆலய வளாகத்திலேயே குழாய்க்கிணறு ஒன்றினை அமைப்பதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே ஆலயவளாகத்தில் குழாய்க்கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதேவேளை, குறித்த வெடுக்குநாறிமலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. எனவே ஆலயவளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.

வெடுக்குநாறிமலையில் தமிழ் மக்களின் வழிபாடு குறித்து ரவிகரன் எம்.பி வலியுறுத்து! | Tamils Allowed Worship At Vedukunarimala Raviharan

அத்துடன், குறித்த ஆலயம் பதிவுசெய்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகவே இந்த ஆலயத்தை பதிவுசெய்வதற்கு இடையூறாக இருக்கின்ற விடயங்களைக் களைந்து. கூடிய விரைவில் பதிவுசெய்வதற்கான நடடிக்கை எடுக்கப்படவேண்டும்.

மேலும் குறித்த ஆலயத்தில் அடையாளம் தெரியாதவர்களால் விக்கிரகங்கள் திருடப்பட்டிருந்தன. பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் ஆலய விக்கிரங்கள் ஆலய நிர்வாகத்தினரால் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றது. 

மலை உச்சியிலுள்ள சிவலிங்கத்தின் மேலாக ஏற்கனவே இருந்ததைப்போல சிறிய அளவிலான பாதுகாப்புக் கூடாரம் அமைப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகள் மேற்கொண்டபோது தடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. எனவே குறித்த பாதுகாப்புக் கூடாரம் அமைக்கவும் அனுமதிவழங்கப்படவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தமிழர் பிரதேசத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985