ஆபத்தான இடத்தில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் - பிரித்தானிய அமைச்சர்கள் மீது வழக்கு

Sri Lankan Tamils United Kingdom
By Sumithiran Jul 09, 2023 12:09 PM GMT
Report

  இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா தீவில் ஆபத்தான சூழ்நிலையில் தாம் பொய்யாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மூன்று பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர்கள் மீது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் குழுவினால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

2021, ஒக்டோபரில் கனடாவுக்கு செல்ல முயன்றபோது, தமது படகு பழுதாகிய காரணத்தால் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியா தீவில் அடைக்கலம் பெற்றனர். இதன் பின்னர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அவர்கள் அங்கு தடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்த காலப்பகுதியில் அங்கு பாலியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களைத் தாங்களே காயப்படுத்தும் செயல்களில்

ஆபத்தான இடத்தில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் - பிரித்தானிய அமைச்சர்கள் மீது வழக்கு | Tamils Case Against British Ministers

பலர் தங்களைத் தாங்களே காயப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர் அல்லது தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மொத்தத்தில், 89 புகலிடக் கோரிக்கையாளர்கள் டியாகோ கார்சியாவிற்கு சென்றுள்ளனர் இதில் சிலர் இலங்கைக்குத் திரும்புவதற்கான கட்டணங்களை ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் பிரெஞ்சு தீவான ரீயூனியனுக்கு சென்றனர்.

இதன்போது, புகலிடக் கோரிக்கைகளை முன்வைத்த பெரும்பான்மையானவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இருவருக்கு மட்டும் "மூன்றாவது நாட்டில்" புகலிடம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 20 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனமான லீ டே, பிரித்தானிய பாதுகாப்பு, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சர்கள் மற்றும் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் ஆணையாளர் போல் கேண்ட்லர் ஆகியோருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்குப் போதிய பாதுகாப்பான வாழ்க்கைத் தரத்தை வழங்கத் தவறியதன் மூலமும், மூன்றாம் தரப்பினரிடமிருந்து அவர்களைப் பாதுகாக்கத் தவறியதன் மூலமும் அரசாங்கம் தனது கடமையில் தவறிவிட்டதாக சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுபோன்ற மேலதிக செய்திகளை அறிய எமது பிரதான செய்திகளுடன் இணைந்து கொள்ளுங்கள்


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019