வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை: வெடித்த மக்கள் போராட்டம்
வவுனியாவில் (Vavuniya) ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
இதனை நிவர்த்தி செய்து தருமாறு தெரிவித்து பெற்றோர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை என பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
பற்றாக்குறை நிவர்த்தி
இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே, ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
