கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட இலத்திரனியல் கழிவு சேகரிப்புத் திட்டம்
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் "இலத்திரனியல் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்தலும் முகாமைத்துவம் செய்தலும்" என்ற நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபாவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித்திட்ட வாரத்தின் வடமாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வு வடமாகாண சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் மகேஸ் யல்தொட்ட தலைமையில் கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் இன்று(07) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சித் திட்டம் இன்று (07) தொடக்கம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலத்திரனியல் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் பணிகள் நடைபெறும்.
இலத்திரனியல் பொருட்கள்

இதன்போது இலத்திரனியல் பொருட்களான கணணி, மடிக்கணணி, தொலைகாட்சி, நிலையான தொலைபேசி, LEDமின்குமிழ், UPS மின்கலம், LED ,LCD திரைகள், வீட்டுப்பாவனை மின்சாதனப்பொருட்கள், அலுவலக மின்சாதனப்பொருட்கள் போன்றவற்றை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் சேகரிப்புகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள இடங்களில் ஒப்படைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.