மாவத்தகமவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி!
மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மாவத்தகமவில் உள்ள அகஸ்யனபிட்டிய சாலையில் நடந்துள்ளது.
மாவத்தகமவிலிருந்து அகஸ்யனபிட்டிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிர்திசையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளைஞன் பலி
விபத்துக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதன் பின்னர் குறித்த இளைஞன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த பயணிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாவத்தகம காவல்துறை மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |