மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்!

Sri Lanka Upcountry People V S Radhakrishnan Sri Lanka
By Aadhithya Jul 24, 2024 07:13 AM GMT
Report

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபா வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் (V. Radhakrishnan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்தவகையில், பொருட்களின் விலை உயர்வு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு போன்ற காரணங்களால் தொழிளலார்களின் சம்பள உயர்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்ற தடை உத்தரவை காரணம் காட்டி சம்பள உயர்வை வழங்க மறுத்து வருகின்றது. இதன் காரணமாக தொழிலாளர்கள் பெரும் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வருகின்றார்கள். 

வட்டி வீதங்கள் குறைப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

வட்டி வீதங்கள் குறைப்பு: இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

பொருளாதார பின்னடைவு 

எனவே, அவர்களுடைய விடயத்தில் அரசாங்கம் மனிதாபிமான ரீதியாக சிந்தித்து செயற்பட வேண்டும். இன்று இலங்கையின் பொருளாதார பின்னடைவு காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பானது வானத்தை தொட்டிருக்கின்றது.

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்! | Temporary 5 000 Pay Urged For Workers

இதன் காரணமாக இலங்கையின் கீழ் மட்டத்தில் இருக்கின்ற மக்கள் தங்களுடைய அன்றாட உணவுத் தேவை உட்டபட இன்னும் பல வேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலையில் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக பல வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். ஆனால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எந்தவிதமான போராட்டமும் இல்லாமல் தங்களுடைய தொழிலை செவ்வனே செய்து வருகின்றார்கள்.

எங்களுடைய தொழிலாளர்களின் வருமானத்தின் மூலமாக ஈரான் நாட்டினுடைய ஒரு தொகுதி கடனையும் தேயிலையையும் வழங்கி அரசாங்கம் கடனை செலுத்தியுள்ளது.

3000 ரூபாயை தாண்டிய இஞ்சி ! உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை

3000 ரூபாயை தாண்டிய இஞ்சி ! உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை

சம்பள உயர்வு

ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடி வருகின்றது. வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் பரிந்துரை என பல விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

ஆனால் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்! | Temporary 5 000 Pay Urged For Workers

எனவே, அரசாங்கம் நீதிமன்றத்தின் வழக்கு தீர்ப்பு கிடைக்கின்ற வரையில் தொழிலாளர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க முன்வர வேண்டும். தொடர்ந்தும் பெருந்தோட்ட மக்கள் தங்களை அர்ப்பணித்து இந்த நாட்டிற்காக உழைத்து வருகின்றார்கள்.

கொவிட் கால கட்டாய உடற் தகனம் : பகிரங்க மன்னிப்பு கோரும் சிறிலங்கா அரசாங்கம்

கொவிட் கால கட்டாய உடற் தகனம் : பகிரங்க மன்னிப்பு கோரும் சிறிலங்கா அரசாங்கம்

நாட்டின் நிலைமை

இதனை தேர்தல் காலத்தில் மாத்திரம் வழங்கிவிட்டு நிறுத்திவிடாமல் வழக்கு நிறைவடைகின்ற வரையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களும் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் அல்லது வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினால் இந்த நாட்டின் நிலைமை என்ன.

மலையக மக்கள் விடயத்தில் அரசு கண்ணாம் பூச்சி ஆட்டம் : இராதாகிருஸ்ணன் காட்டம்! | Temporary 5 000 Pay Urged For Workers

எனவே, இதனை அரசாங்கமும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற அனைவரும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் அரசாங்கம் இடைக்கால கொடுப்பனவை வழங்குவதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அது ஒரு மனிதாபிமான செயற்பாடாக கருதி இதனை செய்ய முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024