யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலுக்கு சென்றவர் திரும்பி வராததால் பதற்றம்
யாழ்ப்பாணம்(jaffna) - வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் இதுவரை கரை சேராததால் உறவினர்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர்.
அ.ஆனதாஸ் என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தொழிலுக்கு சென்ற நிலையில் கரை திரும்பவில்லை
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடலில் மிதந்து வந்த கட்டுமரம்
இன்று (26) குறித்த கடற்றொழிலாளி கடலுக்கு வழமையாக காலை 9.00 மணியளவில் கரைசேர வேண்டியவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்றவேளை, அவர் பயணித்த கட்டுமரமானது கடலில் மிதந்து வந்துள்ளது.
கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம்
கடலட்டை தொழிலில் ஈடுபடும் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மணல்காடு கடற்றொழிலார்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
