மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலை : நிறுவப்பட்ட அவசரகால பதிலளிப்பு பிரிவு
மத்திய கிழக்கில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து அங்குள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையிலும் அவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சினால் அவசரகால பதிலளிப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்தல் : சுமார் 1 மில்லியன் இலங்கையர்கள் இப்பகுதியில் வசித்து தொழில்களில் ஈடுபடுவதால், அவர்களின் பாதுகாப்பு அரசின் முதன்மையான கவனமாக உள்ளது.
தற்போதைய பதற்ற சூழ்நிலை காரணமாக வெளிநாட்டினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக தீர்க்கப்படும் வகையில் இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரகால பதிலளிப்பு பிரிவு தினமும் 24 மணிநேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி விபரங்கள் வருமாறு.
அவசரகால பதில் பிரிவு (வெளிவிவகார அமைச்சு) +94 117 445 641 / +94 112 207 250
வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் மட்டும் +94 777 189 552
மின்னஞ்சல் (Email) emergency.sl@mfa.gov.lk
தூதரக விவகாரப் பிரிவு (வெளிவிவகார அமைச்சு) - +94 742 595 546
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் - +94 719 802 822
உடனடி அழைப்பு இலக்கம் (Hotline) -1989
இதுதான் அமெரிக்காவின் மீட்பு : மாணவிகளை புதைக்க தோண்டிய குழிகளை பகிர்ந்துள்ள ஈரான்: நெஞ்சை உருக வைக்கும் பதிவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |