லண்டனில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து (காணொளி)
பிரித்தானியாவின் தென்கிழக்கு லண்டன் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ப்ரோம்லி (Bromley) நகரத்தின் செயின்ட் மார்க்ஸ் சதுக்கத்தில் உள்ள 17 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 15 வது தளத்திலேயே இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
ஐந்து அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து சமூக ஊடங்களில் வெளியாகியுள்ள காட்சிகளில், அடுக்குமாடி குடியிருப்பின் சாய்ந்த கூரையின் பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் கரும்புகை வெளியேறுவதை காட்டுகிறது.
Oh dear major incident in Bromley. Brave fireman trying to put down the fire. Hope everyone has got out safety pic.twitter.com/oTlu45cMpm
— Patrick Heisel OBE (@PHeiselOBE) July 3, 2022
இந்த விபத்தில் தீப்பிழம்புகள் மிகப் பயங்கரமாக அதிகரித்த நிலையில், தீயிணை அணைக்க பல்வேறு இடங்களில் இருந்தும் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தீவிபத்தில் உயிரிழப்புகள் மற்றும் படுகாயம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவலும் இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.