அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் : முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம்
காவல்துறை விசேட அதிரடிப்படையினர், பொகுனுதென்ன பகுதியில் சட்டவிரோதமாக பயிரடப்பட்ட கஞ்சா தோட்டத்தினை முற்றுகையிட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை உடவளவ காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 70 பேர்ச் கஞ்சா தோட்டத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பயிரடப்பட்ட 258.714 கிலோ கிராம் கஞ்சா இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஹம்பேகமுவ, பலாங்கொட மற்றும் தனமல்வில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஹம்பகமுவ காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுடன், காவல்துறையினர் அவர்களை இன்றைய தினம் வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
You May Like This